×

பாளை. மண்டல அலுவலகத்தில் 28ம் தேதி வி.எம்.சத்திரம் தகனமேடை பராமரிப்பு கலந்தாய்வு கூட்டம்

நெல்லை, ஜூலை 8: வி.எம்.சத்திரம் எரிவாயு தகனமேடை பராமரிப்பு தொடர்பாக தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் கலந்தாய்வு கூட்டம், வரும் 28ம் தேதி நடக்கிறது. இதுகுறித்து நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நெல்லை மாநகராட்சி, பாளை மண்டலம் 38வது வார்டுக்கு உட்பட்ட வி.எம்.சத்திரம் பகுதியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக எரிவாயு தகனமேடை இயங்கி வருகிறது. பொதுமக்களுக்கு சேவை செய்யும் மனப்பான்மையுள்ள பதிவு பெற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இந்த எரிவாயு தகன மேடையில் மாநகராட்சியால் நிர்ணயிக்கப்பட்ட கட்டண வசூல் செய்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளலாம், இப்பணிகளை மேற்கொள்ளும் வகையில் தகுதியுள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களை தேர்வு செய்திட தொண்டு நிறுவனங்களுடன் கலந்தாய்வு கூட்டம், வரும் 28ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு பாளை மண்டல அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நடக்கிறது. இத்தகன மேடையை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள விருப்பமுள்ள தொண்டு நிறுவனங்கள் உரிய ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

The post பாளை. மண்டல அலுவலகத்தில் 28ம் தேதி வி.எம்.சத்திரம் தகனமேடை பராமரிப்பு கலந்தாய்வு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Palai ,VM Chatram ,Zonal Office ,Nellai ,VM Chatram gas ,Dinakaran ,
× RELATED பாளை. சிறையில் கைதிகள் மோதல்